ஈட்டம் இவறி இசைவேண்டா – குறள்: 1003

Thiruvalluvar

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
குறள்: 1003

– அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள்



கலைஞர் உரை

புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக
இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறரொடு போட்டியிட்டுப் பெரும்பொரு ளீட்டுவதையே பெருவிருப்பக் குறிக்கோளாகக் கொண்டு , அதன் பயனாகிய புகழை விரும்பாத ஆண் மக்களின் பிறப்பு; இந்நிலவுலகிற்குச் சுமையாவதன்றி ஒரு பயனும் படுவதன்று.



மு. வரதராசனார் உரை

சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்.



G.U. Pope’s Translation

Who lust to heap up wealth, but glory hold not dear, It burthens earth when on the stage of being they appear.

 – Thirukkural: 1003, Wealth without Benefaction, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.