சொல் என்றால் என்ன? – சொல்லின் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்!

தமிழ் இலக்கணம்

சொல் என்றால் என்ன?

தமிழில், சில எழுத்துகள் மட்டும் ஓர் எழுத்தாக தனித்து நின்று பொருள் தரும்; அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும்.

எடுத்துக்காட்டு:

ஆ, ஈ, கை, தை, பூ, மா, பலா, வாழை, தமிழ், கல்வி, பள்ளி, நூல், கடல், நிலம், வானம், நீர், காற்று.

இவ்வாறு பொருள் தருமாறு வரும் ஓர் எழுத்து அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளின் தொகுப்பு சொல் எனப்படும்.

சொல்லின் வகைகள்

சொற்கள் நான்கு வகைப்படும். அவை;

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

பெயர்ச்சொல்

ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் (எ.கா. – அணில், மரம், கல்வி, பள்ளி, ஆண்டு, பசுமை, தலை)


வினைச்சொல்

ஒரு செயலைக் குறிக்கும் சொல் (எ.கா. – படி, எழுது, எழுதினான், படித்தான்)


இடைச்சொல்

பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும். தனித்து இயங்காது.

எடுத்துக்காட்டு – கு, ஐ, உம், இல்

  • கு – பள்ளிக்குச் சென்றான்
  • – புத்தகத்தை எடுத்தான் (தை = த் + )
  • உம் – எண்ணும் எழுத்தும் (ண் + உம், த் + உம் )
  • இல் – பேருந்தில் சென்றான் (தில் = த் + இல்)

உரிச்சொல்

பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லுடன் சேர்ந்து அவற்றை மிகுதிப்படுத்தும் பொருளில் வரும்.

எடுத்துக்காட்டு – மா, சால, தவ, நனி, கூர், கழி, கடி

  • மா – மாநகரம் (மிகப்பெரிய நகரம் – மா எனும் உரிச்சொல் பெரிய எனும் பொருளில் வருகிறது)
  • சால – சாலச்சிறந்தது (மிகவும் சிறந்தது)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.