நம் கலைஞர்!

நம் கலைஞர்

நம் கலைஞர்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

உலகம் போற்றும் ஒரு தலைவர்

மக்கள் பணியில் முதல் தலைவர்!

சமத்துவம் கண்ட சாதனைத் தலைவர்

பெரியார் கண்ட பெருந் தலைவர்

அண்ணா வழியில் ஒரே தலைவர்

தமிழே போற்றும் தமிழ்த்தலைவர்

அண்ணா அருகில் நம் தலைவர்

அறிவொளி தந்த நம் கலைஞர்!

வள்ளுவர் குறளாய் வாழ்ந்தாரே

வறியோர் வறுமை துடைத்தாரே

மகளிர் நலத்திட்டம் வகுத்தாரே!

நூலகம் பற்பல தந்தாரே

அறநூலாய் அவரும் வாழ்ந்தாரே!

கல்விச் சலுகைகள் கொடுத்தாரே

கல்வியில் உயர வைத்தாரே

ஏற்றத்தாழ்வை ஒழித்தாரே

ஏணியாய் அவரும் இருந்தாரே!

வானுயர வள்ளுவரைத் தந்தாரே

தென்கோடிவரை அவரே உயர்ந்தாரே!

கிழக்கு ஒளியாய் இருப்பவரே

பேனாமுனையில் நம்மை உயர்த்தியவரே!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.