Thiruvalluvar
திருக்குறள்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் – குறள்: 1001

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல். – குறள்: 1001 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச்சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப்போகிறவனுக்கு.அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஈட்டம் இவறி இசைவேண்டா – குறள்: 1003

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை. – குறள்: 1003 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாகஇருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரொடு போட்டியிட்டுப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் – குறள்: 1006

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்றுஈதல் இயல்பு இலாதான். – குறள்: 1006 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும்இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத்தொற்றிக்கொண்ட நோயாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தகுதியுடையவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் – குறள்: 1007

அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகுநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று. – குறள்: 1007 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்தஅழகியொருத்தி், தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப்போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளுமில்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நச்சப் படாதவன் செல்வம் – குறள்: 1008

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று. – குறள்: 1008 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சுமரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறியவர்க்கு அருகிலிருந்தும் ஒன்றுங் கொடாமையின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது – குறள்: 1009

அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டியஒண்பொருள் கொள்வார் பிறர். – குறள்: 1009 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய்விடுவர். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சீருடைச் செல்வர் சிறுதுனி – குறள்: 1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறம்கூர்ந் தனையது உடைத்து. – குறள்: 1010 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஈகையாற் புகழ்பெற்ற செல்வர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது – குறள்: 1002

பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்மருளான்ஆம் மாணாப் பிறப்பு. – குறள்: 1002 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ – குறள்: 1004

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன். – குறள்: 1004 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சிநிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு – குறள்: 1005

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடி உண்டாயினும் இல். – குறள்: 1005 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறருக்கீவதும் [ மேலும் படிக்க …]