Thiruvalluvar
திருக்குறள்

அன்போடு இயைந்த வழக்குஎன்ப – குறள்: 73

அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆர்உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. – குறள்: 73 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடு பொருந்திய தொடர்பை; அன்பு செய்தற்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறத்திற்கே அன்புசார்பு என்ப – குறள்: 76

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை. – குறள்: 76 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதைஅறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாகஇருப்பதாகக் கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பு அறத்திற்கே துணையாவது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் – குறள்: 79

புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துஉறுப்பு அன்பு இலவர்க்கு. – குறள்: 79 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள்அழகாக இருந்து என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை இல்லறம் நடத்துவாரின் உடம்புள் நின்று இல்லறத்திற்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்பின் வழியது உயிர்நிலை -குறள்: 80

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு. – குறள்: 80 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்;இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை [ மேலும் படிக்க …]

அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப
திருக்குறள்

அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப – குறள்: 75

அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு. – குறள்: 75 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர்அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் [ மேலும் படிக்க …]

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை
திருக்குறள்

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை – குறள்: 78

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரம்தளிர்த்து அற்று. – குறள்: 78 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலை வானத்தில்பட்டமரம் தளிர்த்தது போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்,பாலை நிலத்தின் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

என்பிலதனை வெயில் போலக் காயுமே – குறள்: 77

என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை யறம். – குறள்: 77 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் – குறள்:71

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்புண்கணீர் பூசல் தரும். – குறள்: 71 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பம் காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் – குறள்: 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. – குறள்: 72 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர். ஞா. [ மேலும் படிக்க …]

Anbudaimai
திருக்குறள்

அன்புஈனும் ஆர்வம் உடைமை – குறள்: 74

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.      – குறள்: 74         – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்     விளக்கம்:  அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம்,  நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.