தன்னைத்தான் காக்கின் சினம்காக்க – குறள்: 305

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க


தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.குறள்: 305

– அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம்



கலைஞர் உரை

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும; இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தனக்குத் துன்பம் நேராமற் காக்க விரும்பினானாயின் தன் மனத்திற் சினம் வராமற் காக்க; காவானாயின் அச்சினம் தன்னையே கெடுக்குங் கடுந்துன்பங்களை வருவிக்கும்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் தன்னைத்தான் காத்துக்கொள்வதானால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்; காக்காவிட்டால் சினம் தன்னையே அழித்துவிடும்.



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.