மங்கலம் என்ப மனைமாட்சி – குறள்: 60

மங்கலம் என்ப மனைமாட்சி

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
– குறள்: 60

– அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம்



கலைஞர் உரை

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு  மேலும்
சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.



ஞா. தேவநேயப் பாவாணர்

மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாவது; நல்ல அறிவுடை மக்கட்பேறு அதற்கு அணிகலமாவது, என்று கூறுவர் அறிந்தோர்.



மு.வரதராசனார் உரை

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.



G.U. Pope’s Translation

The house’s ‘blessing’, men pronounce the house – wife excellent;
The gain of blessed children is its goodly ornament.

– Thirukkural: 60, The Goodness of the help to Domestic Life, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.