ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் – குறள்: 837

Thiruvalluvar

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
– குறள்: 837

– அதிகாரம்: பேதைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக்
கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ள
சுற்றத்தாருக்குப் பயன்படாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பேதையானவன் ஊழ்வயத்தாற் பெருஞ்செல்வம் பெற்றவிடத்து; தன்னோடு ஒரு தொடர்பு மில்லாத அயலார் நிரம்ப வுண்ணத் தன் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினரும் உண்ணுதற்கின்றிப் பசியோடிருப்பர்.



மு. வரதராசனார் உரை

பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற. அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.



G.U. Pope’s Translation

When fools are blessed with fortune’s bounteous store,
Their foes feed full, their friends are prey to hunger sore.

Thirukkural: 837, Folly, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.