அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் – குறள்: 992

Thiruvalluvar

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்இரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு.
– குறள்: 992

– அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்தநெறியாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எல்லார்மேலும் அன்புடைமையும் எல்லா நல்லிணக்கமும் அமைந்த குடியிற் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ;பண்புடைமையென்னும் ஒழுக்கத்திற்கு இன்றியமையாத இயல்களாம்.



மு. வரதராசனார் உரை

அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.



G.U. Pope’s Translation

Benevolence and high-born dignity,
These two are beaten paths of courtesy.

 – Thirukkural: 992, Perfectness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.