Thiruvalluvar
திருக்குறள்

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் – குறள்: 1000

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலம்தீமை யால்திரிந் தற்று. – குறள்: 1000 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் – குறள்: 992

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்இரண்டும்பண்புஉடைமை என்னும் வழக்கு. – குறள்: 992 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்தநெறியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லார்மேலும் அன்புடைமையும் எல்லா [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் – குறள்: 993

உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்கபண்புஒத்தல் ஒப்பதுஆம் ஒப்பு. – குறள்: 993 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல: நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நயனொடு நன்றி புரிந்தபயன் – குறள்: 994

நயனொடு நன்றி புரிந்தபயன் உடையார்பண்புபா ராட்டும் உலகு. – குறள்: 994 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப்பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை நேர்பாட்டையும் (நீதியையும்) நல்வினையையும் விரும்புதலாற் பிறர்க்குப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி – குறள்: 995

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்பண்புஉள பாடுஅறிவார் மாட்டு. – குறள்: 995 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளையாட்டாகவேனும் ஒருவரைப் பற்றிப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் – குறள்: 996

பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன். – குறள்: 996 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலக நடப்பு பண்புடையாரிடத்துப் படுதலால் இடையறாது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அரம்போலும் கூர்மைய ரேனும் – குறள்: 997

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கள்பண்பு இல்லா தவர். – குறள்: 997 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அரம்போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும்,மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மாந்தர்க்குரிய பண்பில்லாதவர்; அரத்தின் கூர்மை போலுங் கூரிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நண்புஆற்றார் ஆகி நயம்இல – குறள்: 998

நண்புஆற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும்பண்புஆற்றா ராதல் கடை. – குறள்: 998 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்துகொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு – குறள்: 999

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்பகலும்பாற் பட்டன்று இருள். – குறள்: 999 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பதுபகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர்க்கு; மிகப்பெரிய [ மேலும் படிக்க …]

Birds
திருக்குறள்

எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப – குறள்: 991

எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு.      – குறள்: 991                  – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் விளக்கம்:  யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் [ மேலும் படிக்க …]