அகர முதல எழுத்தெல்லாம் – குறள்: 1

அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
– குறள்: 1

– அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம்



கலைஞர் உரை

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது.



மு.வரதராசனார் உரை

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.



G.U. Pope’s Translation

A, as its first of letters, every speech maintains;
The ‘Primal Deity’ is First through all the world’s domains

– Thirukkural: 1, The Praise of God, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.