Thiruvalluvar
திருக்குறள்

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் – குறள்: 955

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பின் தலைப்பிரிதல் இன்று. – குறள்: 955 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால்தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தொன்று தொட்டு வருகின்ற [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு – குறள்: 956

சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு அற்றகுலம்பற்றி வாழ்தும்என் பார். – குறள்: 956 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வசையற்று வருகின்ற எங்குடி மரபோ டொத்து ஒழுகக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் – குறள்: 957

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. – குறள்: 957 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோலவெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் – குறள்: 958

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்குலத்தின்கண் ஐயப் படும். – குறள்: 958 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் – குறள்: 959

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். – குறள்: 959 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்ததுஎன்று அறிந்து கொள்ளலாம். அதேபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் – குறள்: 960

நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு. – குறள்: 960 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும்ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் – குறள்: 967

ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று. – குறள்: 967 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச்செத்தொழிவது எவ்வளவோ மேல். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன்னை யிகழ்வார் பின் சென்று அவர் தரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் – குறள்: 901

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்வேண்டாப் பொருளும் அது. – குறள்: 901 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்பம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பேணாது பெண்விழைவான் ஆக்கம் – குறள்: 902

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும். – குறள்: 902 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை – குறள்: 903

இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும். – குறள்: 903 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]