நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் – குறள்: 960

Thiruvalluvar

நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
குறள்: 960

– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும்
ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தனக்கு இம்மை மறுமை நன்மைகளை வேண்டுவானாயின்; தான் நாணமுடையவனா யிருத்தல் வேண்டும்; தன் உயர்குடிப் பிறப்பைக் காத்துக் கொள்ள விரும்புவானாயின், பெரிய ரெல்லாரிடத்தும் பணிவுடைய வனாயிருத்தல் வேண்டும்.



மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.



G.U. Pope’s Translation

Who seek for good the grace of virtuous shame must know;
Who seek for noble name to all must reverence show.

Thirukkural: 960, Nobility, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.