பேணாது பெண்விழைவான் ஆக்கம் – குறள்: 902

Thiruvalluvar

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
குறள்: 902

– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.



கலைஞர் உரை

ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் ஆண்மை மேம்பாட்டைக் காவாது தன் மனைவிக்கு அடிமையாகுமளவு அவளைக் காதலிப்பவன் பெற்ற செல்வம்; தன்பாலார்க்கெல்லாம் மிகுந்த நாணமுண்டாகுமாறு தனக்கு வெட்கக் கேட்டை விளைவிக்கும்.



மு. வரதராசனார் உரை

கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்க செயலாக நாணத்தைக் கொடுக்கும்.



G.U. Pope’s Translation

Who gives himself to love of wife, careless of noble name, His wealth will clothe him with o’erwhelming shame.

Thirukkural: 902, Being led by Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.