Thiruvalluvar
திருக்குறள்

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் – குறள்: 445

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். – குறள்: 445 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்த கூறும் அறிஞர்பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மந்திரிமாரைக் கண்ணாகக் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

தக்கார் இனத்தனாய் தான்ஒழுக – குறள்: 446

தக்கார் இனத்தனாய் தான்ஒழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்தது இல். – குறள்: 446 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும்அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க அமைச்சரைச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடிக்கும் துணையாரை ஆள்வாரை – குறள்: 447

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரேகெடுக்கும் தகைமை யவர். – குறள்: 447 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்றுநடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங்கண்ட விடத்து வன்மையாய்க் கடிந்து கூறும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடிப்பாரை இல்லாத ஏமரா – குறள்: 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பார் இலானும் கெடும். – குறள்: 448 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை – குறள்: 449

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலைஆம்சார்புஇலார்க்கு இல்லை நிலை. – குறள்: 449 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்- குறள்: 442

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல். – குறள்: 442 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெய்வத்தால் அல்லது மக்களால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த – குறள்: 450

பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல். – குறள்: 450 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் நற்குணச் [ மேலும் படிக்க …]

தம்மின் பெரியார் தமரா
திருக்குறள்

தம்மின் பெரியார் தமரா – குறள்: 444

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையுள் எல்லாம் தலை. – குறள்: 444 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

அரியவற்றுள் எல்லாம் அரிதே
திருக்குறள்

அரியவற்றுள் எல்லாம் அரிதே – குறள்: 443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல். – குறள்: 443 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல்எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் [ மேலும் படிக்க …]

Guide
திருக்குறள்

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் – குறள்: 441

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல்.      – குறள்: 441 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் விளக்கம்: அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.