உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்- குறள்: 442

Thiruvalluvar

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
– குறள்: 442

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்



கலைஞர் உரை

வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தெய்வத்தால் அல்லது மக்களால் நேர்ந்த துன்பங்களை முறைப்படி நீக்கி; அத்தகையன பின்பு நேராவண்ணம் முன்னறிந்து காக்க வல்ல தன்மையுடையாரை; அவர் மகிழ்வன செய்து அவர் துணையைப் போற்றிக் கொள்க.



மு. வரதராசனார் உரை

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.



G.U. Pope’s Translation

Cherish the all- accomplished men as friends, Whose skill the present ill removes, from coming ill defends.

 – Thirukkural: 442, Seeking the Aid of Great Men, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.