இடிக்கும் துணையாரை ஆள்வாரை – குறள்: 447

Thiruvalluvar

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.
– குறள்: 447

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்



கலைஞர் உரை

இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று
நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

குற்றங்கண்ட விடத்து வன்மையாய்க் கடிந்து கூறும் உண்மைத்துணையாளரைத் தமக்குச் சிறந்தவராகக் கொண்டொழுகும் அரசரை; கெடுக்குந் திறமையுடைய பகைவர் உலகத்தில் யார் தான் ?



மு. வரதராசனார் உரை

கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யார் இருக்கின்றனர்?



G.U. Pope’s Translation

What power can work his fall, who faithful ministers Employs, that thunder out reproaches when he errs.

 – Thirukkural: 447, Seeking the Aid of Great Men, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.