செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை

Plant

செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை

 

தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறது.

Coconut Tree

 

பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறது.

Guava

 

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வா போலப் பழம்தருது.

Mango Tree

 

அம்மா வைத்த முருங்கையுமே
அளவில் லாமல் காய்க்கிறது.

Drumstick Tree

 

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போலப் பழுக்கிறது.

Pomegranate

 

சின்னஞ் சிறுவன் நானும்ஒரு
செடியை நட்டு வளர்ப்பேனே !

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.