உழுவார் உலகத்தார்க்கு ஆணி – குறள்: 1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணி

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
– குறள்: 1032

– அதிகாரம்: உழவு, பால்: பொருள்



கலைஞர் உரை

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில் இருப்பதால், அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உழவுத் தொழிலைச் செய்வார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர்; அத்தொழிலைச் செய்யும் வலிமையின்றிப் பிற தொழில்களை மேற்கொள்வாரை யெல்லாம் தாங்குதலால்.



மு. வரதராசனார் உரை

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.



G.U. Pope’s Translation

The ploughers are the linch-pin of the world; they bear
Them up who other works perform, too weak its toils to share.

 – Thirukkural: 1032, Agriculture, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.