இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் – குறள்: 900

Thiruvalluvar

இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்
சிறந்துஅமைந்த சீரார் செறின்.
குறள்: 900

– அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மாபெருந் தவமுனிவர் வெகுள்வாராயின்; அவரால் வெகுளப்பட்டவர் தலைசிறந்த துணையையுடையவராயினும் தப்பிப் பிழையார்.



மு. வரதராசனார் உரை

மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால், அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது.



G.U. Pope’s Translation

Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they’re lost.

Thirukkural: 900, Not Offending the Great, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.