பற்றுஅற்ற கண்ணும் பழமை – குறள்: 521

Thiruvalluvar

பற்றுஅற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
– குறள்: 521

– அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப்
பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் செல்வம் அல்லது அதிகாரம் தொலைந்து வறியனானதின் விளைவாகத் தொடர்பு நீங்கிய விடத்தும் , அவனொடு தமக்கிருந்த பழையவுறவைச் சொல்லிப்பாராட்டும் இயல்புகள் ; உறவினரிடத்திலேயே உள்ளன.



மு. வரதராசனார் உரை

ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.



G.U. Pope’s Translation

When wealth is fled, old kindness still to show, Is kindly grace that only kinsmen know.

 – Thirukkural: 521, Cherishing one’s kindred, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.