Thiruvalluvar
திருக்குறள்

கருவியும் காலமும் செய்கையும் – குறள்: 631

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு. – குறள்: 631 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைக்கு வேண்டுங் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் – குறள்: 632

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு. – குறள்: 632 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப்பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிரித்தலும் பேணிக் கொளலும் – குறள்: 633

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்லது அமைச்சு. – குறள்: 633 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தெரிதலும் தேர்ந்து செயலும் – குறள்: 634

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு. – குறள்: 634 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான் – குறள்: 635

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. – குறள்: 635 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியலறங்களை யறிந்து தனக்குரிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு – குறள்: 636

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாஉள முன்நிற் பவை. – குறள்: 636 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையான நுண்மதியைச் செயற்கையான [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செயற்கை அறிந்தக் கடைத்தும் – குறள்: 637

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல். – குறள்: 637 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூலறிவால் வினை செய்யுந் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

அறிகொன்று அறியான் எனினும் – குறள்: 638

அறிகொன்று அறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன். – குறள்: 638 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் தன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் – குறள்: 639

பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்ஓர்எழுபது கோடி உறும். – குறள்: 639 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே – குறள்: 640

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர். – குறள்: 640 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினையைச் செய்து முடிக்கும் திறமையில்லாதவர்; செய்யவேண்டிய [ மேலும் படிக்க …]