திருக்குறள்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – குறள்: 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார். – குறள்: 10 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க – குறள்: 293

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும். – குறள்: 293 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் நெஞ்சு அறிந்த ஒன்றைப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் – குறள்: 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. – குறள்: 72 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர். ஞா. [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – குறள்: 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்தெய்வத்துள் வைக்கப் படும். – குறள்: 50 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கைம்மாறு வேண்டா கடப்பாடு – குறள்: 211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு. – குறள்: 211 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகிலுள்ள [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மங்கலம் என்ப மனைமாட்சி – குறள்: 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்நன்கலம் நன்மக்கட் பேறு. – குறள்: 60 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு  மேலும்சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது. ஞா. தேவநேயப் பாவாணர் மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாவது; [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கற்றதனால் ஆய பயனென்கொல் – குறள்: 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின். – குறள்: 2 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் – குறள்: 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. – குறள்: 1 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் – குறள்: 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். – குறள்: 3 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அன்பும் அறனும் உடைத்தாயின் – குறள்: 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது. – குறள்: 45 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு, அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் [ மேலும் படிக்க …]