பள்ளி எழுச்சி  (பெண்)  – இன்னும் தூக்கமா பாப்பா – பாரதிதாசன் கவிதை

Wake Up

பள்ளி எழுச்சி  (பெண்)  – பாரதிதாசன் கவிதை

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?

பொன்னைப் போல வெய்யிலும் வந்தது
பூத்த பூவும் நிறம்கு றைந்தது

Sun

உன்னால் தோசை ஆறிப் போனதே
ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே

 

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?

 

காலைக் கடனை முடிக்க வேண்டும்
கடியக் கொஞ்சம் படிக்க வேண்டும்

Reading

நீலக் கூந்தல் வார வேண்டும்
நினைத்தது போல் உடுத்த வேண்டும்

School

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?

 

நேரத் தோடு போகின்றார்
நிறையப் பெண்கள் தெருவில் பார்
காரியத்தில் கண்ணாயிரு
கைகாரப்பெண்ணாயிரு

Doctor

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.