![அந்த இடம்](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2021/01/zoo1.jpg)
அந்த இடம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி
அப்பா என்னை
அழைத்துச் சென்றார்.
அங்கு ஓரிடம்.
![Peacock](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2018/12/peacock2.jpg)
அங்கி ருந்த
குயிலும், மயிலும்
ஆடித் திரிந்தன.
பொல்லா நரியும்,
புனுகு பூனை
எல்லாம் நின்றன.
![](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2021/01/zoo2.jpg)
குட்டி மான்கள்,
ஒட்டைச் சிவிங்கி
கூட இருந்தன.
குரங்கு என்னைப்
பார்த்துப் பார்த்துக்
“குறுகு” றென்றது.
![](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2019/12/elephant-2.jpg)
யானை ஒன்று
காதைக் காதை
ஆட்டி நின்றது.
முதலை தலையைத்
தூக்கிப் பார்த்து
மூச்சு விட்டது !
![](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2021/01/bears.jpg)
கரடி கூட
உறுமிக் கொண்டே
காலைத் தூக்கிற்று !
சிறுத்தை ஒன்று
கோபத் தோடு
சீறிப் பார்த்தது !
அங்கு எங்கள்
அருகி லேயே
சிங்கம் நின்றது !
![](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2019/09/lion-2.jpg)
கரடி, சிங்கம்
புலியைக் கண்டேன்;
கண்டும் பயமில்லை.
சூர னைப்போல்
நின்றி ருந்தேன்;
துளியும் பயமில்லை !
சென்ற அந்த
இடம் உனக்குத்
தெரிய வில்லையா ?
மிருகக் காட்சி
சாலை தானே;
வேறொன்றும் இல்லை !
Be the first to comment