விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற – குறள்: 143

Thiruvalluvar

விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்து ஒழுகுவார். – குறள்: 143

– அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம்



கலைஞர் உரை

நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில்
ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மை நல்லவரென்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின் கண் தீவினை செய்தலை விரும்பியொழுகுவார் ; உறுதியாக ;இறந்தாரின் வேறுபட்டவரல்லர் .



மு. வரதராசனார் உரை

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்.



G.U. Pope’s Translation

They ‘re numbered with the dead, e’en while they live-how otherwise? With wife of sure confiding friend who evil things devise.

 – Thirukkural: 143,Not Coveting Another’s Wife, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.