சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் விளக்கம்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குஉறுதி பயப்பதுஆம் தூது. – குறள்: 690 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்துவிடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் கூறுஞ்செய்தியால் [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


The kural can be sung as a song so that, the kural may reach to many people.