ஒற்றும் உரைசான்ற நூலும் – குறள்: 581

Thiruvalluvar

ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
– குறள்: 581

– அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒற்றும் புகழமைந்த அரசியல் நூலும் ஆகிய இவ்விரண்டையும்; அரசன் தன் இரு கண்களாகத் தெளிக.



மு. வரதராசனார் உரை

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளிய வேண்டும்.



G.U. Pope’s Translation

These two: the code renowned, and spies,
In these let king confide as eyes.

 – Thirukkural: 581, Detectives, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.