Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றும் உரைசான்ற நூலும் – குறள்: 581

ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்தெற்றென்க மன்னவன் கண். – குறள்: 581 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றும் புகழமைந்த அரசியல் நூலும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை – குறள்: 582

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில். – குறள்: 582 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும்எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா – குறள்: 583

ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா மன்னவன்கொற்றம் கொளக்கிடந்தது இல். – குறள்: 583 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன்விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றரால் எல்லார் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் – குறள்: 584

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றுஆங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று. – குறள்: 584 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர்,வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல்பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கடாஅ உருவொடு கண்அஞ்சாது – குறள்: 585

கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று. – குறள்: 585 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப்பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துறந்தார் படிவத்தர் ஆகி – குறள்: 586

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்துஎன்செயினும் சோர்வுஇலது ஒற்று. – குறள்: 586 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போல காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மறைந்தவை கேட்கவற் றுஆகி – குறள்: 587

மறைந்தவை கேட்கவற் றுஆகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று. – குறள்: 587 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் – குறள்: 588

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர்ஒற்றினால் ஒற்றி கொளல். – குறள்: 588 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றுஒற்று உணராமை ஆள்க – குறள்: 589

ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்சொல்தொக்க தேறப் படும். – குறள்: 589 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களைஇயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றரையாளுமிடத்து ஒருவனை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க – குறள்: 590

சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை. – குறள்: 590 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய மறைபொருட்களை [ மேலும் படிக்க …]