ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் – குறள்: 69

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்

ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். – குறள்: 69

– அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம்



கலைஞர் உரை

நல்ல மகனைக் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட  அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் மகனைக் கல்வியறிவு நிறைந்தோனென்று அறிவுடையோர் சொல்லக்கேட்ட தாய், தான் அவனைப் பெற்றெடுத்த பொழுதினும் பெரிது மகிழ்வாள்.



மு. வரதராசனார் உரை

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள்.



G.U. Pope’s Translation

When mother hears him named ‘fulfill’d of wisdom’s lore,’
Far greater joy she feels, than when her son she bore.

– Thirukkural: 69, The Wealth of Children, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.