பாப்பா பாட்டு – ஓடி விளையாடு பாப்பா – பாரதியார் கவிதை

Kids

 
 

பாப்பா பாட்டுபாராதியார் கவிதை

ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

kid-bubbles

 
 

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

kuruvi

 
 

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

hen-with-chicks

 
 

பாலைப் பொழிந்துதரும், பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

puppy

 
 

வண்டி இழுக்கும்நல்ல குதிரை, – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

farmer-with-bulls

 
 

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

girl-writing

2 Comments

  1. மகாகவி ஒரு சகாப்தம். அலைபேசியுடனும் இணையத்திலும் தனியாக விளையாடி கொண்டிருக்கும் இன்றைய குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உணர வேண்டிய வரிகள்… காலம் பாரதியை பிரித்தாலும் அவர் வரிகள் நிலையானவை.

    • குறைக்கடத்தியாலான மின்னணுக் கருவிகள் கற்றுக் கொடுக்கும் பாடத்தை விட, குழந்தைகளுக்கு இயற்கை கற்றுத் தரும் பட்டறிவு அளவிட முடியாதது. இதைச் சென்ற நூற்றாண்டிலேயே, பாரதியார், பாரதிதாசன் போன்ற புரட்சிக்கவிகள், முக்காலதையும் நன்கு அறிந்து நமக்கு வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.