வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை

Lightning

வானத்திலே திருவிழாபொன். செல்வகணபதி கவிதை

வானத்திலே திருவிழா!
வழக்கமான ஒருவிழா

இடிஇடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்!

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

 

தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்!

Rain

 

எட்டுத்திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே!

தெருவிலெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே!

Kids Playing in Rain in Street

 

தவளை கூடப் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே!

Frog

 

பார்முழுதும் வீட்டிலே
பறவைகூட கூட்டிலே!

Birds in Nest

அகண்டவெளி வேடிக்கை
ஆண்டுதோறும் வாடிக்கை!


5 Comments

  1. அழகான கவிதை… பார் முழுதும் வீட்டிலே… பறவை கூட கூட்டிலே.. வரிகள் அருமை..

  2. மின்னலொரு நாட்டியம். மேடை வான மண்டபம்.. மிகவும் அழகான உவமை..👏👏👏

    • சிறு வயதில் படித்த இந்த கவிதை இன்னும் நம் நினைவில் இருப்பதற்குக் காரணம்:
      இந்தப் பாடலின் எளிமை, அழகு, மற்றும் குழந்தைகளே ராகத்தோடு பாடும் வண்ணம் எதுகை மோனையோடு, அமைந்த கவிதை நடை. கவிஞருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

  3. Remembering my old memories almost the year of 1989 i guess. Such a wonderful Tamil poem. This is the only poem i knew vey well during my studies. 🙂 My Tamil teacher was appreciated me lot. that was my first appreciation from my teacher… Unforgotable days..(tears in my eyes). What a joyful days without any worries…

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.