வாள்போல் பகைவரை அஞ்சற்க – குறள்: 882

Thiruvalluvar

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
குறள்: 882

– அதிகாரம்: உட்பகை, பால்: பொருள்.



கலைஞர் உரை

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கொல்லும் வாள்போல வெளிப்படையாகப் பகைக்கும் பகைவர்க்கு அவ்வளவு அஞ்ச வேண்டுவதில்லை; ஆனால், உறவினர் போலிருந்து மறைவாகப் பகைக்கும் உட்பகைவரின் போலியுறவிற்கு மிகுதியாக அஞ்சுக.



மு. வரதராசனார் உரை

வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை; ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.



G.U. Pope’s Translation

Dread not the foes that as drawn swords appear;
Friendship of foes, who seem like kinsmen, fear!

Thirukkural: 882, Enmity Within, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.