அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் – குறள்: 189

Thiruvalluvar

அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப்
புன் சொல்உரைப்பான் பொறை.
– குறள்: 189

– அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை ‘இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறர் இல்லாத சமயம் பார்த்து அவரைப் பழித்துரைக்கும் புறங் கூற்றாளனது உடலைப் பொறுத்தலை; மாநிலம் தனக்கு அறமென்று கருதிச் செய்யும் போலும்!



மு. வரதராசனார் உரை

ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல்பாரத்தை, `இவனையும் சுமப்பதே எனக்கு அறம்’ என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?



G.U. Pope’s Translation

‘Tis charity, I ween, that makes the earth sustain their load, Who, neighbours’ absence watching, tales or slander tell abroad.

 – Thirukkural: 189, Not Backbiting, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.