உள்ளியது எல்லாம் உடன்எய்தும் – குறள்: 309

உள்ளியது எல்லாம் உடன்எய்தும்

 

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.      – குறள்: 309

                           – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் 

கலைஞர் உரை

ஒருவன் உள்ளத்தால் சினம் கொள்ளாதவனாக இருந்தால், எண்ணியவற்றையெல்லாம் அவன் உடனடியாகப் பெறுவான்.

மு. வரதராசனார் உரை

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.