பரியது கூர்ங்கோட்டது ஆயினும் – குறள்: 599

பரியது கூர்ங்கோட்டது ஆயினும்

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
– குறள்: 599

– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்




கலைஞர் உரை

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு; கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

யானை விலங்குகளெல்லாவற்றுள்ளும் உருவத்திற் பெரியதும், அதோடு கூரிய கொம்புள்ளதுமாயினும்; உருவப் பருமையும் கொம்புமில்லாத புலி தன்னைத்தாக்கின், அஞ்சி எதிர்க்காது அதனாற் கொல்லப்படும்.



மு.வரதராசனார் உரை

யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.



G.U. Pope’s Translation

Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed!

– Thirukkural: 599, Energy, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.