மணிநீரும் மண்ணும் மலையும் – குறள்: 742

Thiruvalluvar

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.
– குறள்: 742

– அதிகாரம்: அரண், பால்: பொருள்



கலைஞர் உரை

ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும்
மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே
அரணாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

(மதிலையடுத்த) நீலமணிபோலும் நிறத்தையுடைய அகழிநீரும்; அதனையடுத்த வெறு நிலமும்; அதனையடுத்த குளிர்ந்த நிழலுள்ள அழகிய காடும்; அதனையடுத்த பல நீள் மலையும்; தனக்கு முன்னாக முறையே உடையதே சிறந்த மதிலரணாவது.



மு. வரதராசனார் உரை

மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.



G.U. Pope’s Translation

A fort is that which owns a fount of waters crystal clear, An open space, a hill, and shade of beauteous forest near.

 – Thirukkural: 742, The Fortification, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.