நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்இன்மையே இன்னா தது. – குறள்: 1041 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத்துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பந்தருவது எதுவென்று வினவின்; [ மேலும் படிக்க …]
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். – குறள்: 451 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால்சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ்மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெரியார் [ மேலும் படிக்க …]
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின். – குறள்: 560 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள்எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காத்தற்குரிய அரசன் குடிகளையும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment