நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை. – குறள்: 488 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக்கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர். – குறள்: 778 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமைஆற்றுபவர்கள்தான், போர்க்களத்தில் உயிரைப்பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்வரின் இறப்பிற்கஞ்சாது [ மேலும் படிக்க …]
மனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடிமறைந்துஒழுகும் மாந்தர் பலர். – குறள்: 278 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல,மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment