நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண்என்னும்நன்மை குறித்தது சால்பு. – குறள்: 1013 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாணஉணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லா வுயிர்களும் உடம்பைத் தமக்கு நிலைக்களமாகக் கொண்டு [ மேலும் படிக்க …]
நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமைக் கோடாது உலகு. – குறள்: 520 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின்செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும். [ மேலும் படிக்க …]
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்அழிக்கல் ஆகா அரண். – குறள்: 421 – அதிகாரம்: அறிவுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற்காக்குங் கருவியாம்; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment