கற்க கசடற கற்பவை கற்றபின் – குறள்: 391

கற்க கசடற

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. – குறள்: 391

– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்



கலைஞர் உரை

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர்

ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களைப் பிழையறக் கற்க; அங்ஙனம் கற்றபின் அதற்கேற்ப ஒழுகுதலைக் கடைப்பிடிக்க.



மு. வரதராசனார் உரை

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.



G.U. Pope’s Translation

So lear that you may full and faultless learning gain, Then in obedience meet to lessons learnt remain.

– Thirukkural: 391, Learning , Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.