காலம் கருதி இருப்பர் – குறள்: 485

காலம் கருதி இருப்பர்

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். – குறள்: 485

– அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதும் அரசர்; மனக்கலக்கமின்றி, தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி , அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர் .



மு.வரதராசனார் உரை

உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் கொண்டு பொறுத்திருப்பர்.



G.U. Pope’s Translation

Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.

– Thirukkural: 485, Knowing the fitting time, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.