இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்
விளக்கம்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100
விளக்கம்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி. – குறள்: 923 – அதிகாரம்: கள் உண்ணாமை, பால்: பொருள் விளக்கம் கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிசூழாது செய்யும் அரசு. – குறள்: 554 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு நிதிஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்குடி கட்கு நன்மையையும் தன்தவற்றால் மேல் விளைவதையும் [ மேலும் படிக்க …]
எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றுஅன்ன செய்யாமை நன்று. – குறள்: 655 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை ‘என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment