அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் – குறள்: 474

Thiruvalluvar

அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
குறள்: 474

அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வேற்றரசரோடு பொருந்தி அதற்கேற்ப நடந்துகொள்ளாமலும் ; தன் வலியளவை அறியாமலும் ; தன்னை உயர்வாக மதித்து அவரொடு பகைகொண்ட வரசன் ; விரைந்து கெடுவான் .



மு. வரதராசனார் உரை

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.



G.U. Pope’s Translation

Who not agrees with those around, no moderation knows, In self-applause indulging, swift to ruin goes.

 – Thirukkural: 474,The Knowledge of Power, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.