குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் – நாலடியார்: 131

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் – நாலடியார்: 131

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
நாலடியார் 131

– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்



குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல



Reading

நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.



விளக்கம்

தலைமுடியின் அழகும், உடலை வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும், மஞ்சள் பூச்சின் அழகும் மக்களுக்கு அழகுகள் அல்ல; நாம் நல்லவர் என்று தம் மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால், மக்களுக்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.