Thiruvalluvar
திருக்குறள்

மையல் ஒருவன் களித்தற்றால் – குறள்: 838

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்கைஒன்று உடைமை பெறின். – குறள்: 838 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில்ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெரிதுஇனிது பேதையார் கேண்மை – குறள்: 839

பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதுஒன்று இல். – குறள்: 839 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது;ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும்ஏற்படுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் – குறள்: 840

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல். – குறள்: 840 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள், நுழைவது என்பது,அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன் அறிவொழுக்கங்களால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் – குறள்: 741

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள். – குறள்: 741 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருவகைப்பட்ட பாதுகாப்பமைப்பு; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை – குறள்: 794

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. – குறள்: 794 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும்பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவதுபெற்றிருப்பது பெரும் சிறப்புக் குரியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறின்உயிர் அஞ்சா மறவர் – குறள்: 778

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர். – குறள்: 778 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமைஆற்றுபவர்கள்தான், போர்க்களத்தில் உயிரைப்பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்வரின் இறப்பிற்கஞ்சாது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் – குறள்: 837

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை. – குறள்: 837 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக்கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ளசுற்றத்தாருக்குப் பயன்படாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன் ஊழ்வயத்தாற் பெருஞ்செல்வம் பெற்றவிடத்து; தன்னோடு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொய்படும் ஒன்றோ புனைபூணும் – குறள்: 836

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப்பேதை வினைமேற் கொளின். – குறள்: 836 . – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடரமுடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக்கொள்வர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யும் வகை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை – குறள்: 835

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்தான்புக்கு அழுந்தும் அளறு. – குறள்: 835 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக் காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன்; எழுபிறப்பளவும் தான் அழுந்திக்கிடந்து வருந்தும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் – குறள்: 834

ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்பேதையின் பேதையார் இல். – குறள்: 834 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்குஉணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறுநடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அடங்கியொழுகுதற் [ மேலும் படிக்க …]