Thiruvalluvar
திருக்குறள்

ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் – குறள்: 1012

ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறுஅல்லநாண்உடைமை மாந்தர் சிறப்பு. – குறள்: 1012 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவானதேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஊனைக் குறித்த உயிர்எல்லாம் – குறள்: 1013

ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண்என்னும்நன்மை குறித்தது சால்பு. – குறள்: 1013 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாணஉணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லா வுயிர்களும் உடம்பைத் தமக்கு நிலைக்களமாகக் கொண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு – குறள்: 1014

அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல்பிணிஅன்றே பீடு நடை. – குறள்: 1014 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் – குறள்: 1015

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குஉறைபதி என்னும் உலகு. – குறள்: 1015 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும்வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர்க்கு வரும் பழியையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாண்வேலி கொள்ளாது மன்னோ – குறள்: 1016

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர். – குறள்: 1016 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பரந்த இந்த உலகில் எந்தப் பாதுகாப்பையும்விட, நாணம் எனும்வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக்கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்தோர்; தமக்குப் பாதுகாப்பாகிய நாணினைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாணால் உயிரைத் துறப்பர் – குறள்: 1017

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாண்ஆள் பவர். – குறள்: 1017 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளஉயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகமானத்தை விடமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர்; நாணும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிறர்நாணத் தக்கது தான்நாணான் – குறள்: 1018

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்அறம்நாணத் தக்கது உடைத்து. – குறள்: 1018 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காகவெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டுஅகன்று விட்டதாகக் கருத வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்டாருங் கேட்டாருமாகிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குலம்சுடும் கொள்கை பிழைப்பின் – குறள்: 1019

குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும்நாண்இன்மை நின்றக் கடை. – குறள்: 1019 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும்.அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாண்அகத்து இல்லார் இயக்கம் – குறள்: 1020

நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்று. – குறள்: 1020 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும்மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கருமத்தால் நாணுதல் நாணு – குறள்: 1011

கருமத்தால் நாணுதல் நாணு திருநுதல்நல்லவர் நாணுப் பிற. – குறள்: 1011 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்லபெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மக்கள் நாணுவது [ மேலும் படிக்க …]