ஊனைக் குறித்த உயிர்எல்லாம் – குறள்: 1013

Thiruvalluvar

ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
– குறள்: 1013

– அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாண
உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எல்லா வுயிர்களும் உடம்பைத் தமக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப்பற்றும்; அதுபோலச் சான்றாண்மை நாண் என்னும் நற்குணத்தைத் தனக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப் பற்றும்.



மு. வரதராசனார் உரை

எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை; சால்பு என்பது, நாணம் என்று சொல்லபடும் நல்ல தன்மையை இருப்பிடமாகக் கொண்டது.



G.U. Pope’s Translation

All spirits homes of flesh as habitation claim,
And perfect virtue ever dwells with shame.

 – Thirukkural: 1013, Shame, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.