பிறர்நாணத் தக்கது தான்நாணான் – குறள்: 1018

Thiruvalluvar

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
– குறள்: 1018

– அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக
வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டுஅகன்று விட்டதாகக் கருத வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கண்டாருங் கேட்டாருமாகிய பிறர் நாணத்தக்க பழியை ஒருவன்தான் நாணாது செய்வானாயின்; அந்நாணாமை அறம் நாணி அவனைவிட்டு நீங்கத் தக்க குற்றத்தை யுடையதாம்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.



G.U. Pope’s Translation

Though know’st no shame, while all around ashamed must be; Virtue will shrink away ashamed of thee!

 – Thirukkural: 1018, Shame, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.