கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்
திருக்குறள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் – குறள்: 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை. – குறள்: 15 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும்,பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

ஏரின் உழாஅர் உழவர்
திருக்குறள்

ஏரின் உழாஅர் உழவர் – குறள்: 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளம் குன்றிக்கால். – குறள்: 14 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உலகத்திற்கு ஆணியாகிய [ மேலும் படிக்க …]

விண்இன்று பொய்ப்பின்
திருக்குறள்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் – குறள்: 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. – குறள்: 13 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின், [ மேலும் படிக்க …]

வான்நின்று உலகம்
திருக்குறள்

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் – குறள்: 11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுஉணரல் பாற்று. – குறள்: 11 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவேஅமிழ்தம் எனப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் [ மேலும் படிக்க …]

ஆத்திசூடி - உயிர் வருக்கம்
ஆத்திசூடி

ஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்

ஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார் அறம் செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல். ஈவது விலக்கேல். உடையது விளம்பேல். ஊக்கமது கைவிடேல். எண் எழுத்து இகழேல். ஏற்பது இகழ்ச்சி. ஐயம் இட்டு உண். ஒப்புரவு ஒழுகு. ஓதுவது ஒழியேல். ஔவியம் பேசேல். அஃகம் சுருக்கேல்.

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க
திருக்குறள்

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க – குறள்: 36

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. – குறள்: 36 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
திருக்குறள்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே – குறள்: 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாம் செயல். – குறள்: 33 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறமாகிய நல்வினையை தத்தமக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை – குறள்: 32

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்குஇல்லை கேடு. – குறள்: 32 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை. ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் – குறள்: 31

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. – குறள்: 31 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மறுமையில் விண்ணுலக இன்பத்தையும், வீடுபேற்றையுந் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கோளில் பொறியில் குணமிலவே – குறள்: 9

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை. – குறள்: 9 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ, அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை [ மேலும் படிக்க …]