நாய்க்குட்டி – சிறுவர் பகுதி – அழ. வள்ளியப்பா கவிதை

நாய்க்குட்டி

நாய்க்குட்டி – பாப்பாவுக்குப் பாட்டு – சிறுவர் பகுதி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை

தோ… தோ… நாய்க்குட்டி,
 துள்ளி வாவா நாய்க்குட்டி.


உன்னைத் தானே நாய்க்குட்டி,
ஓடி வாவா நாய்க்குட்டி.


கோபம் ஏனோ நாய்க்குட்டி?
குதித்து வாவா நாய்க்குட்டி.


 கழுத்தில் மணியைக் கட்டுவேன்;
 கறியும் சோறும் போடுவேன்.

  இரவில் இங்கே தங்கிடு.
  எங்கள் வீட்டைக் காத்திடு !



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.