சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் – குறள்: 934

Thiruvalluvar

சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல்.
குறள்: 934

– அதிகாரம்: சூது, பால்: பொருள்.



கலைஞர் உரை

பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும்
ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பல்வேறு இழிவுதருந்துன்பங்களைச் செய்து, உள்ள பெருமையையுங் கெடுக்கும் சூதாட்டத்தைப்போல; கொடிய வறுமையைத் தரக்கூடியது வேறொன்றுமில்லை.



மு. வரதராசனார் உரை

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.



G.U. Pope’s Translation

Gaming brings many woes, and ruins fair renown; Nothing to want brings men so surely down.

Thirukkural: 934, Gambling, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.